சிறுவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பில் அறிவிக்க விசேட இலக்கம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

Wednesday, July 28th, 2021

கொழும்பு நகரில் சிறுவர்களை பணிக்கு அமர்த்தியுள்ள இடங்களை கண்டறிவதற்காக  நேற்றையதினம் 30 இடங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

புலனாய்வு பிரிவின் தகவல்களுக்கு அமைய முகத்துவாரம் மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுகளில் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், சிறுவர்களை பணிகளுக்கு அமர்த்தியுள்ள இடங்களை கண்டறிவதற்கான சுற்றிவளைப்புக்கள் மேலும் சில பெபாலிஸ் பிரிவுகளில் இன்றையதினமும் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறுவர்களை பணிக்கு அமர்த்துதல், வன்கொடுமைக்கு ஆளாக்குதல், துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துதல் உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான தகவல்களை 0112 433 333 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறு அவர் மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: