சிறுவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு – நாடு முழுவதும் சிறுவர் நீதிமன்றங்களை உருவாக்க துரித நடவடிக்கை!

Wednesday, July 21st, 2021

நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் ஒன்பது சிறுவர் மஜிஸ்திரேட் நீதிமன்றங்களையும், ஒன்பது சிறுவர் உயர் நீதிமன்றங்களையும் நிறுவும் பணிகள் நடைபெற்று வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பிரதித் தலைவர், சட்டத்தரணி சுஜாதா அலஹபெருமா தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் ஊடகங்களின் சமூக தாக்கம் குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் பத்தரமுல்ல மற்றும் யாழ்ப்பாணத்தில் இரண்டு சிறுவர் நீதவான் நீதிமன்றங்கள் மட்டுமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒன்பது சிறுவர் உயர் நீதிமன்றங்களை அமைக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கொரோனா தாக்கம் தொடருமானால் தேர்தல் அல்ல, எதையும் செய்யமுடியாது - சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாச...
டெல்டா உள்ளிட்ட புதிய வைரஸ்கள் எதிர்வரும் நாட்களில் மேலும் தீவிரமடையும் : இராஜாங்க அமைச்சர் பேராசிரி...
சர்வகட்சி ஆட்சி அமைப்பதற்காக ஒவ்வொரு தரப்பினரும் முன்வைத்த யோசனைகள் அனைத்துக் கட்சிகளுக்கும் அறிவிக்...