கொரோனா தாக்கம் தொடருமானால் தேர்தல் அல்ல, எதையும் செய்யமுடியாது – சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க எச்சரிக்கை!

Monday, May 25th, 2020

சுகாதார நடவடிக்கைகளை சரியான முறையில் பின்பற்றவில்லை என்றால் அடுத்த 3 வாரங்களில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடையும் என சுகாதார பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தல் நடவடிக்கைகளை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என அரசாங்கத்திடம் தான் அறிவித்த போதிலும் தனிமைப்படுத்தல் சட்டத்தை வலுப்படுத்தல், மக்கள் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு திருப்பும் நடவடிக்கை, உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என்றால் அடுத்த 3 வாரங்களில் கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கும் நிலை உருவாக்கும்.

அப்படி தலை தூக்கினால் தேர்தல் மாத்திரமல்ல ஒன்றையும் செய்ய முடியாது. தேர்தல் நடவடிக்கையை முன்னோக்கி கொண்டு செல்வது தொடர்பில் சுகாதார அதிகாரி என்ற ரீதியில் அதற்கான வாய்ப்புகளையே நான் கூறினேன்.

முழுமையாக கொரோனாவை கட்டுப்படுத்தி விட்டோம் என நான் கூற மாட்டேன். எனினும் இதே முறையில் சென்றால் எங்களால் கட்டுப்படுத்த முடியும் என எனக்கு தெரியும்.

அத்துடன் என்னுடைய இந்த அறிவிப்பை அரசியல் கோணத்தில் பார்க்காமல், உண்மையாக பாருங்கள். என்னுடைய 30 வருட அரச சேவையில், அரசியல் பின்னால் நான் சென்றதில்லை. என்றும் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்துள்ள அவர் சில அரசியல்வாதிகள் அதை திறவுங்கள் இதை திறவுங்கள் என்று கூறுகின்றார்கள். எனினும் எங்கள் பணியை செய்ய விடுங்கள். நாங்கள் அவற்றினை சரியாக செய்வோம் என அவர் மேலும் தெரிவித்துள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: