காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Monday, April 20th, 2020

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று பிற்பகல் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன், மன்னார், வவுனியா, அநுராதபுரம், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மின்னல் தாக்கமும் காற்றின் வேகமும் சற்று அதிகரித்து காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வகூறியுள்ளது.

Related posts: