சிறுவர்களிடையே பரவும் புதிய வைரஸ் தொற்று – சிறுவர் நோய் பிரிவின் விசேட வைத்தியர் எச்சரிக்கை!

Friday, April 30th, 2021

சிறுவர்களிடையே பரவும் வைரஸ் தொற்று நோய் ஒன்று தற்போது பரவிக்கொண்டிருப்பதாக கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் பிரிவின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தகவல் வெளியிட்டுள்ளார்.

6 வயதுக்கு குறைவான சிறுவர்களிடையே இந்த நோய் தொற்று விரைவாக பரவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாய்க்குள்ளும், உடலின் வெவ்வேறு பகுதிகளிலும் சிவப்புநிற புள்ளிகள் ஏற்படுதல் இந்த நோய்க்கான பிரதான அறிகுறியாகும். அத்துடன், சில சந்தர்ப்பங்களில் சிறுவர்களுக்கு காய்ச்சல் ஏற்படும் நிலையும் உள்ளது.இந்த நோய் நிலை காரணமாக சிறுவர்களுக்கு உணவு உட்கொள்வதில் சிக்கல் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம்  குறித்த நோய் அறிகுறிகளுடன் கூடிய அதிகளவான சிறுவர்கள், கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலைக்கு சிகிச்சைப்பெற வருவதாகவும் அந்த வைத்தியசாலையின் சிறுவர் நோய் பிரிவின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்தத் தொற்று நோய்க்கு விரைவில் சிகிச்சையளிக்காவிட்டால், சிறுவர்களின் நகங்களும் உதிரக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்கு எண்ணும் பணி ஆரம்பிக்கப்படும் - யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்!
இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் - அமைதியை உருவாக்க தென்னாபிரிக்கா தயாராக இருப்பதாக அதிபர் சிரில் ரமபோசாஅறி...
இலங்கையில் இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவன...