சிறார்களுக்கான மரண தண்டனை தொடர்பான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – நீதி அமைச்சரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இலங்கையின் குற்றவியல் நடைமுறை தொடர்பான சட்டத்தின் 281 ஆவது பிரிவைத் திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நீதிமன்றத்தின் தத்துவப்படி குற்றமிழைக்கும் சந்தர்ப்பத்தில் 18 வயதுக்குக் குறைவான எந்தவொரு நபருக்கும் மரண தண்டனையை விதிக்க கூடாது
இதற்கு பதிலாக ஜனாதிபதி விரும்பும்வரை தடுப்புக் காவலில் வைத்திருக்கும் வகையில் தண்டனைச் சட்டக்கோவையில் 53 ஆம் உறுப்புரையை திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், 18 வயதுக்குக் குறைவாக இருப்பின் மரண தண்டனை விதிக்கப்படக் கூடாதெனக் கூறும் ஏற்பாடுகள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 281 ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்படவில்லை.
இதனால், நிலவுகின்ற நிச்சயமற்ற தன்மையை நீக்குவதற்காக குற்றவியல் வழக்குக் கோவைச் சட்டத்தில் குறித்த திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 281 ஆவது உறுப்புரையை திருத்தம் செய்வதற்காக நீதி அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|