சிறந்த சூழ்நிலை ஏற்பட்ட பின்னர் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Thursday, June 17th, 2021
நாட்டில் கொவிட் 19 தொற்று நிலைமை தணிந்து சிறந்த சூழ்நிலை ஏற்பட்ட பின்னர் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான முதற்கட்டமாக, ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வி துறையைச் சேர்ந்த பணியாளர்களுக்கு கொவிட் 19 தொற்று தடுப்பூசி ஏற்றப்படும் நடவடிக்கை அமையும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
பாடசாலைகளை மீண்டும் படிப்படியாக திறக்கக்கூடிய பின்புலத்தை முறையாக வகுப்பது தொடர்பில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விவசாயக் காப்புறுதி இலவசம் - அமைச்சர் மஹிந்த அமரவீர!
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 891 ஆக உயர்வு - 382 பேர் பூரண குணமடைந்துள்ளனர் – சுகாதார அம...
கட்டணம் செலுத்தத் தவறிய பத்து இலட்சம் மின்சார இணைப்புக்கள் நாடளாவிய ரீதியில் துண்டிப்பு - அமைச்சர் க...
|
|
|


