சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு யாழ். மாவட்டச் சிகை ஒப்பனையாளர்களுக்கு நேரக் கட்டுப்பாடு தளர்வு

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு யாழ். மாவட்டச் சிகை ஒப்பனையாளர்களுக்கான நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் சிகை ஒப்பனையாளர்களின் கூட்டுறவுச் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று – 7 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் எதிர்வரும்-13 ஆம் திகதி வரை இந்த நேரக் கட்டுப்பாடு தளர்வு அமுலிலிருக்கும். எதிர்வரும் – 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வழமையான விடுமுறை தினம் ஆன போதும் சிகை ஒப்பனை நிலையங்களைத் திறந்து தொழிலில் ஈடுபடுமாறும் , எதிர்வரும் -14 ஆம் திகதி முதல் வழமையான நேரக் கட்டுப்பாடு மற்றும் விடுமுறை தினங்கள் நடைமுறைக்கு வரும் எனவும் மேற்படி சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
மே மாதமளவில் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை!
யாழ். மாநகர சபை ஆணையாளராக ஜெயசீலன் நியமனம்!
எரிபொருள் விலை அதிகரிப்பு - நிதியமைச்சரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் நாடாளுமன்றில் - ஹர்ஷ எம்...
|
|