சார்க் நாடுகளின் சாரணர் குழு – ஜனாதிபதி சந்திப்பு!
Saturday, October 21st, 2017
ஹர்மன் லூஸ் வெற்றிக் கிண்ண முகாமை பார்வையிடுவதற்காக வருகை தந்துள்ள ஐந்து சார்க் நாடுகளின் தேசிய சாரணர் குழு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்..
கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
பங்களாதேஷ் இந்தியா நேபாளம் பாகிஸ்தான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி சாரணர் குழுக்களும் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
ஒவ்வொரு குழுவுக்கும் பொறுப்பான உயர் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அன்பளிப்புகளை வழங்கியதுடன், அந்த அதிகாரிகளும் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கினர்.
Related posts:
உர நிவாரணத் தொகையை வங்கிக் கணக்குகளில் வைப்பீடு செய்யும் நடைமுறை ஆரம்பம்!
இலங்கையின் மீன்பிடித் துறைகளில் வீழ்ச்சி!
மின்தடையை சீராக்க சீனாவில் இருந்து நிபுணர் வருகை - இலங்கை மின்சார சபையின் தலைவர் தகவல்!
|
|
|


