சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக்காலம் நீடிப்பு – போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர!

ஏப்ரல் 16 முதல் மே 31 வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் ஒவ்வொரு சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் ஜூலை 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர, அதிசிறப்பு வர்த்தமானி ஊடாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த விதிமுறைகள் மோட்டார் போக்குவரத்து சட்டத்தின் கீழ் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் வழங்கிய அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கும் பொருந்தும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டை அச்சுறுத்திய கொரோனா மெதாற்றை கட்டுப்படுத்த நாடுமுழுவது; ஏற்படுத்தப்பட்டுள்ள சுகாதார முன்னெடுப்பகள் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்துவரும் நிலையில் குறித்த அறிவிப்பை போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டிலிருந்து வெளியேறினாரா அர்ஜுன் மகேந்திரன்?
கல்வியியற் கல்லூரிக்குப் பதிவு செய்ய பதிவுத் தபால் கட்டாயம்!
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் மேலும் பிளவு - வாக்களிப்பில் பங்கேற்கவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற ...
|
|