சாதாரண தர பரீட்சைக்காக  தேசிய அடையாள அட்டையின் புகைப்படத்தை மாற்றிய மாணவன் கைது!

Thursday, December 13th, 2018

தேசிய அடையாள அட்டை புகைப்படத்தில் சூட்சுமமான முறையில் புதிய புகைப்படமொன்றினை மாற்றி பரீட்சை எழுதிய மாணவனை தனமல்விலை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

தனமல்விலைப் பகுதியின் ரத்மலாகம கனிஷ்ட வித்தியாலய பரீட்சை மண்டபத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சை இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் பரீட்சை நிலையப் பொறுப்பாளர் பரீட்சார்த்திகளின் தேசிய அடையாள அட்டைகளைப் பரிசீலனை செய்து வரும்போது குறிப்பிட்ட மாணவனின் தேசிய அடையாள அட்டையில் சந்தேகம் நிலவியதை அடுத்து அவர் அப்பகுதி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குத் தகவல் வழங்கினார்.

குறித்த தகவலின் பேரில் விரைந்த பொலிஸார் குறிப்பிட்ட மாணவனைக் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணையில் தேசிய அடையாள அட்டையின் புகைப்படம் மாற்றப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட மாணவன் விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts: