சவுதியின் முன்னணி ஆடை நிறுவனப் பிரதிநிதிகள் – வெளிவிவகார அமைச்சர் அல் சப்ரி சந்திப்பு – இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பில் ஆரராய்வு!

Tuesday, November 15th, 2022

சவுதியின் முன்னணி ஆடை நிறுவனமான Ajlan & Bros Group இன் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

அஜ்லான் & பிரதர்ஸ் குழுமத்தின் தலைவர் ஷேக் மொஹமட் அல்-அஜ்லான் உள்ளிட்ட குழுவினரை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வரவேற்றார்.

“இலங்கையில் முதலீடு செய்வதற்கான குழுவின் திட்டங்கள் ஊக்கமளிக்கின்றன” என்று அமைச்சர் அலி சப்ரி டுவிட்டர் செய்தியில் தெரிவித்தார்.

Ajlan & Bros Group, சவுதி அரேபியா மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) பிராந்தியத்தில் பாரம்பரிய மற்றும் ஓஃப்-தி-ஷெல்ஃப் ஆடை தயாரிப்புகளில் நிபுணத்துவம் பெற்ற முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும்.

1979 இல் நிறுவப்பட்டதும் ரியாத்தை தளமாகக் கொண்டதுமான அஜ்லான் & பிரதர்ஸ் 10 க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாடுகளில் 12,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts:

கிண்ணியா - குறிஞ்சாக்கேணிக்கு 9 மாதங்களுக்குள் பாலம் : நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!
எரிபொருள் விலை உயர்வு - புகையிரதத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு –புகையிரத பெட்டிகளை அதிகரிக...
வனவளத் திணைக்களத்தினரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் – திலீபனின் எ...