சர்வதேச நாணய நிதியத்துடனான அதிகாரிகள் மட்டப் பேச்சுவார்த்தை இவ்வாரத்துக்குள் ஆரம்பம் – நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
Monday, May 2nd, 2022சர்வதேச நாணய நிதியத்துடனான அதிகாரிகள் மட்டப் பேச்சுவார்த்தை இந்த வாரத்துக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அத்துடன் 2 மாதங்களுக்கு அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தையில் முதற்கட்ட இணக்கப்பாடு எட்டப்படும் என நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடல்களுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கை வரவுள்ளது. அத்துடன் சில கலந்துரையாடல்கள் இணையம் ஊடாகவும் இடம்பெறவுள்ளதாகவும் நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். முன்பதாக சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் இரண்டு மாதங்களுக்குள் வெற்றியளிக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க அண்மையில் நம்பிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
துமிந்தவிற்கு இறுதி தீர்ப்பு இன்று!
விளையாட்டை மேம்படுத்தி நாட்டில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவோம்! - ஜனாதிபதி
மீண்டும் நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் – ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவிப்பு!
|
|