சரியான இலக்கை நோக்கி நாம் அடியெடுத்து வைப்பதால் குறைபாடுகள் இருக்கலாம் – குறைகள் சரி செய்யப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Monday, July 31st, 2023

இரண்டரை தசாப்தங்களுக்கும் மேலாக வெளிப்படையான மற்றும் சரியான இலக்கை நோக்கி நாம் அடியெடுத்து வைப்பதால் குறைபாடுகள் இருக்கலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும உதவித் திட்டம் தொடர்பில் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நலன்புரி நலன்கள் ஒருபோதும் வெளிப்படையான அமைப்பைக் கொண்டிருக்கவில்லை. நலத்திட்ட உதவிகள் பெறத் தகுதியற்றவர்கள் வலைக்குள் இருந்தனர்.  இது அரசாங்கம் செய்து வரும் உள்ளடக்கத் திருத்தம் மற்றும் விலக்குத் திருத்தம் ஆகும்.

எனவே குறைபாடுகள் இருக்கலாம் என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால் சமூக நலன்கள் தேவைப்படும் ஒவ்வொரு நபரும் கருத்தில் கொள்ளப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்.

ஆனால், அரசியல் கண்ணோட்டத்தில் அதைச் செய்ய முடியாது. நீங்கள் ஒரு தற்காலிக அடிப்படையில் நபர்களைத் தேர்ந்தெடுக்க முடியாது.  அது ஒரு வெளிப்படையான செயல்முறையாக இருக்க வேண்டும்.

சவால்கள் இருக்கும் வகையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றத்தை ஏற்படுத்துகின்றோம் என்பதுதான் அரசு தரக்கூடிய ஒரே உறுதி.  தற்போது  ஒரு மில்லலியனுக்கும் அதிகமான முறையீடுகள் மற்றும் ஒரு இலட்சம் ஆட்சேபனைகள் உள்ளன.

நாங்கள் அவற்றை மறுபரிசீலனை செய்வோம் மற்றும் அனைவரும் தீர்வு காணப்படுவதை உறுதி செய்வோம்.  மற்றும் அனைவருக்கும் தீர்வு காணப்படுவதை உறுதி செய்வோம்.  யாரும் பின் தங்கியிருக்க  மாட்டார்கள்.

இந்த மாதத்திற்குள் அவர்களின் நனல்புரிப் பலன்களைப் பெறுவதை நாங்கள் உறுதி செய்வோம். மற்றும் ஓகஸ்ட் கட்டணத்துடன் மறு ஆய்வு செயல்முறை முடிந்ததும் ஜூலை மாத கட்டணத்தை நாங்கள் சரி செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

ஏப்ரல் 21 தாக்குதல் விவகாரம் : முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடும் எச்சரிக்கை!
எதிர்வரும் 21ஆம்முதல் வடமாகாண மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்க ஏற்பாடு – தவறாது பெற்றுக்கொள்ளுமாற...
நிதி நிலைமை சீரானதுடன், நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வுகள் வழங்கப்...