சம்பள முரண்பாடுகளை தீர்க்க நடவடிக்கை – கல்வி அமைச்சர்!
Friday, July 12th, 2019
பாடசாலை அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பாக நிதியமைச்சு கவனம் செலுத்தியிருப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி தேவையான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்றும் பி.சி.பெரேரா சம்பள அறிக்கையின் மூலமே இந்த சம்பள முரண்பாட்டு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டுக்கு அமைவாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதிபர்களின் சம்பளம் 106 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆசிரியர் ஆலோசகர்கள் சம்பள முரண்பாடு குறித்து குறுகிய காலத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என்றும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர் வரி!
நிர்ணய விலையை விட அதிகமான விலைக்கு காய்கறிகளை விற்ற வியாபாரிகள் கைது - நுகர்வேர் அதிகார சபை!
விலங்குகள் நல சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம்!
|
|
|
கொரோனா அச்சுறுத்தல்: யாழ்ப்பாணத்தில் 2 ஆவது கட்டமும் வெற்றிகரமாக எதிர்கொள்ளப்படும் - யாழ்.போதனா வைத...
யாழில் முடக்கப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பில் இரு வாரங்களின் பின்னரே முடிவெடுக்கப்படும் – மாகாண சுகாதார...
2.9 மில்லியன் குடும்பங்களுக்கு நாளை முதல் இலவச அரிசி விநியோகம் - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவ...


