சமுர்த்தி பயனாளிகளுக்கு புதிய திட்டம் அறிமுகம்!
Tuesday, June 12th, 2018சமுர்த்தி பயனாளிகளின் முதலீடுகள் குறித்து மதிப்பீடு செய்யும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய புதிய கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்தி கூடுதல் கடன் தொகையை அவர்களுக்கு வழங்குவதே இதன் நோக்கமாகும் என்று சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் ஜே.தடல்லகே தெரிவித்துள்ளார்.
அனைத்து சமுர்த்தி வங்கிகளிலும் தகவல் தொழில்நுட்பத்தின் கீழ் ஒன்றிணைத்து வைப்பீட்டாளர்களுக்கு வசதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முறையான முகாமைத்துவத்தின் கீழ் வைப்பீட்டாளர்கள் வங்கி மீது கொண்டுள்ள நம்பிக்கை அதிகரித்ததனால், 2016ம் ஆண்டிலும் பார்க்க 2017ம் ஆண்டு சமுர்த்தி வங்கியின் வருமானம் அதிகரித்திருப்பதாகவும் சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் ஜே.தடல்லகே கூறினார்.
Related posts:
முச்சக்கர வண்டிகளுக்கான ஆரம்ப வாடகைக் கட்டணம் குறைப்பு!
மாணவர்களுக்கு டெப் கணினி : கல்வி துறையில் பாரிய வெற்றி - கல்வி அமைச்சர்!
இன்றுமுதல் பயணிகள் பேருந்துகளை கண்காணிக்கும் பணியில் இரகசிய பொலி அதிகாரி - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அற...
|
|