சமிக்கை காட்டப்பட்ட நிலையிலும், மக்கள் அதனை பொருட்படுத்தாது மீறி செல்கின்றனர் – இதுவே உயிர்கள் காவுகொள்ளப்படுவதற்கு காரணம் என கிளிநொச்சி புகையிரத நிலைய அதிபர் குற்றச்சாட்டு!

Monday, July 24th, 2023

புகையிரதம் வருவதற்கான சமிக்கை காட்டப்பட்ட நிலையிலும், மக்கள் அதனை பொருட்படுத்தாது சமிக்கையை மீறி செல்கின்றனர். இதன் காரணமாகவே பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றது என கிளிநொச்சி புகையிரத நிலைய அதிபர் புத்திகாமிணி பரமசிகாமணி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். வடக்கிற்கான புகையிரத சேவை 5 மாதங்களின் பின்னர் மீண்டும் கடந்த 15.07.2023 அன்று  மீண்டும் வழமைபோல் ஆரம்பித்துள்ளது. 

இந் நிலையில் தற்பொழுது புகையிரதக் கடவையில் புகையிரதம் வருவதற்கான சமிக்கை காட்டப்பட்ட நிலையிலும், மக்கள் அதனை பொருட்படுத்தாது சமிக்கையை மீறி செல்கின்றனர்.

இதன் காரணமாகவே பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றது. எனவே மக்கள் மிகவும் விழிப்புடன் செயல்ப்பட வேண்டும்.

வீதி சமிக்கைகளை மதித்து புகையிரதம் செல்லும்வரை  சில நிமிடங்கள் தாமதித்து செல்வதன் மூலம் உயிர்சேதம்இ பொருட்சேதம்  என்பவற்றை தவிர்த்துக் கொள்ளமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: