சந்தர்ப்பவாத ஆர்ப்பாட்டங்கள் செய்வதை நிறுத்துங்கள் – தொழிற்சங்கங்களிடம் அமைச்சர் நாமல் வலியுறுத்து!
Sunday, August 8th, 2021
சந்தர்ப்பவாத ஆர்ப்பாட்டம் செய்து மக்களை கஸ்டத்தில் தள்ளி, கோரிக்கைகளை முன்வைத்து நிறைவேற்றிக் கொண்டால் அதன் வெற்றியை கொண்டாட முடியாது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தொழிற்சங்கங்களிடம் கோரிக்கை தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் தற்போதுள்ள நிலைமைகளை கருத்தில் கொண்டு தொழிற்சங்க நடவடிக்கைகளை லொக்டவுன் செய்யுமாறும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தொழிற்சங்கங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேநேரம் அரசாங்கத்துடன் அல்லது ஜனாதிபதியுடம் பிரச்சினை இருந்தால் அதனை தனிப்பட்ட முறையில் பேசித் தீர்த்துக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆபத்துக்களை கருத்தில் கொண்டு செயற்படுமாறும் அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கு வைரஸ் பரவல் நிலை முடிந்த பின் தீர்வு காண முடியும் எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொலிஸ்மா அதிபர்யாழ்.விஜயம்: குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராய்வு!
தொடரும் போராட்டங்கள் - பொதுமக்கள் பெரும் பாதிப்பு!
மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி!
|
|
|


