சட்ட விரோதமாக ரீ யூனியன் தீவிற்கு சென்ற இலங்கை மீனவர்கள்!

ரீ யூனியன் தீவிற்கு சட்ட விரோதமான முறையில் சென்ற 7 இலங்கை மீனவர்களை மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள ரீ யூனியன் தீவிற்கு சட்ட விரோதமான முறையில் நுழைந்த 7 மீனவர்களை கடந்த வாரம் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் கைது செய்திருந்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி டுஓசத புதாடு என்ற படகில் ரீ யூனியன் தீவிற்கு பயணித்த நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 7 மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த மீனவர்களில் ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டிருந்த நிலையில் நேற்று இலங்கையை வந்தடைந்துள்ளதாகவும் மேலும் இருவர் இன்று திருப்பி அனுப்பப்பட உள்ளதாகவும் மீன்பிடி திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு மாபெரும் வெற்றியை தந்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள...
யாழ்ப்பாணத்திற்கு மேலும் 50 ஆயிரம் தடுப்பூசிகள் வருகை – திங்கள்முதல் வழங்க ஏற்பாடு!
பால் மா தட்டுப்பாட்டுக்கு தீர்வு - குறையின்றி நாடு முழுவதிலும் ஹைலண்ட் பால் மாவினை விநியோகிக்க நடவடி...
|
|