சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 இலங்கை மீனவர்கள் கைது!

Friday, September 23rd, 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 12 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் மற்றும் முல்லைத்தீவு கடற் பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை கூறியுள்ளது.  மன்னார், கொந்தம்பித்தி பிரதேசத்தை அண்மித்த கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இது தவிர, முல்லைத்தீவு, கொகிலாய் பிரதேசத்தை அண்மித்த கடற்பரப்பில் 10 மீனவர்கள் னவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர்பிலான மேலதிக நடவடிக்கைக்காக, மன்னார் உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுலகத்திற்கும், முல்லைத்தீவு பொலிஸாரிடமும் ஒப்படைத்ததாக இலங்கை கடற்படை கூறியுள்ளது.

3532178000000578-3638147-Taking_love_to_new_heights_After_landing_each_of_the_newlywed_pa-a-43_1465774022612

Related posts: