சட்டவிரோத கூரிய ஆயுதங்கள் ஒப்படைக்கும் கால அவகாசம் நீடிப்பு!

Monday, May 6th, 2019

சட்டவிரோத வாள்கள், கூரிய கத்திகள் மற்றும் இராணுவ சீருடைக்கு ஒப்பான ஆடைகளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கும் காலம் மேலும் 48 மணித்தியாலங்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.

அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் குறித்த ஆயுதங்களை ஒப்படைக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஆயுதங்கள் மற்றும் சீருடைகளை பொலிஸ் நிலையங்களில் ஒப்படைப்பதற்காக கடந்த சனிக்கிழமைமுதல் இரண்டு நாட்கள் காலவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அது இன்று(06) நள்ளிரவுடன் நிறைவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே மேலும் 48 மணிநேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வன்னி மாவட்ட விவசாய அபிவிருத்திக்காக மூவாயிரத்து முன்நூறு மில்லியன் ஒதுக்கீடு- விவசாய அமைச்சர் மஹிந்...
ஓகஸ்ட் முதலாம் திகதிமுதல் யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா பல்கலைக்கழகமாக செயற்படும் - ...
சட்டத்திற்கு புறம்பாக எதனையும் செய்ய முடியாது - பொலிஸ் காவலில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் குறித்த...