நிதி உத்தரவாதங்களை வழங்க பாரீஸ் கழக கடன் வழங்குநர்கள் இணக்கம்!

Wednesday, February 8th, 2023

இலங்கைக்கு, சர்வதேச நாணய நிதியத்தின், நிதியுதவி ஒப்புதலை பெறுவதற்கான, நிதி உத்தரவாதங்களை வழங்க பாரீஸ் கழக கடன் வழங்குநர்கள் இணங்கியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி ஹங்கேரி, சவூதி அரேபியா மற்றும் இந்தியா ஆகிய இருதரப்பு கடன் வழங்குநர்களுடனும், ஏனைய முக்கிய பங்குதாரர்களுடன் மறுசீரமைப்புக்காக இணைந்து செயற்படவுள்ளதாக பாரிஸ் கழகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்தியா, இலங்கைக்கு வழங்கிய கடனை 10 வருடத்துக்கு காலதாமதப்படுத்தவும், 15 வருடங்களுக்கு மறுசீரமைக்கவும் இணங்கியுள்ளது. எனினும் சீனா இரண்டு வருட கால தாமதத்துக்கு மாத்திரமே இணங்கியுள்ளது.

இந்தநிலையில் சீனாவின் நிலைப்பாடே தற்போது, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதி வழங்கலுக்கு தடையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


ஐ.நா சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டத்தின் 5 ஆவது பொதுச்சபை கூட்டத்தில் ஆசிய பசுபிக் பிராந்திய சுற்றாடல்...
ஒலுவில் துறைமுகத்தில் மீனுக்கான உணவு மற்றும் மீன் உணவு உற்பத்தித் தொழிற்சாலை – முதலீடு செய்ய தயாராக ...
வீதியில் நெல்லை பரவிக் கொண்டிருந்தவர் மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் வடமராட்சியில் ஒருவர் உயி...