வீதி விபத்துக்களால் நாளாந்தம் 8 முதல் 10 பேர் உயிரிழக்கின்றனர் – பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு!
Tuesday, March 27th, 2018வீதி விபத்துக்களால் நாளாந்தம் 8 முதல் 10 பேர் வரை உயிரிழப்பதுடன் 50 பேர் வரை காயமடைகின்றனர். வாகன விபத்துக்களினால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசாங்கம் வருடாந்தம் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபா செலவுசெய்கிறது. இத்தொகை மொத்த தேசிய வருமானத்தில்1.5 சதவீதமாகும் என்று பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
அதிக விபத்துக்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளாலேயே ஏற்படுகின்றது.
கடந்த வருடம் 2910 விபத்துக்கள் இடம்பெற்றள்ளன. இந்தக் காலப்பகுதிக்குள் 3078 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் 935 பேர் பாதசாரிகளாவர். 998 பேர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களாவர். இவ்வாறான விபத்துக்களுக்குப் பிரதான காரணம் அலட்சியமாக வாகனம் ஓட்டுகின்றமையே எனபோக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
பிரதமர் பங்குபற்றலுடன் 31 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா ஆரம்பம்!
தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனம்!
நீர் விநியோகிக்கும் விடயத்தை அரசியலாக்க எவருக்கும் இடமளிக்க போவதில்லை – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உ...
|
|