சட்டவிரோதமாக பொலித்தீன் உற்பத்தியிலீடுபட்ட 28 நிலையங்களுக்கு எதிராக வழக்கு!

Tuesday, April 9th, 2019

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கடந்த மாதம் முதல் 781 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், சட்டவிரோதமாக பொலித்தீன் உற்பத்தியில் ஈடுபடும் 28 உற்பத்தி நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2,282 இடங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் சட்டவிரோதமாக பொலித்தீன் உற்பத்தியில் ஈடுபட்ட 177 நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பரிசோதனை அதிகாரி என்.எஸ். கமகே குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு சட்டவிரோதமாக பொலித்தீன் உற்பத்தியில் ஈடுபடும் உற்பத்தி நிறுவனங்கள் கொழும்பு, குருநாகல் மற்றும் காலி மாவட்டங்களில் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: