வடக்கு கிழக்கில் பாரிய அபிவிருத்தி – பிரதமர் உறுதி!

Tuesday, September 20th, 2016

 

வடக்கு கிழக்கை பாரிய அபிவிருத்திக்கு உட்படுத்துவதோடு எம்மை முந்தி சென்ற வியட்நாம், சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் தரத்திற்கு தேசிய இலங்கையை கொண்டு வருவோம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தனவின் 110 ஆவது ஜனன தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,

ஐரோப்பிய ஆதிக்கத்திற்கு ஆசியா சிக்குண்ட போது திறந்த பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன ஆசியாவில் பொருளாதார புரட்சியை உருவாக்கினார். ஐரோப்பிய ஒன்றியத்திடம் தன்வசம் இருந்த தங்கத்தை வழங்கி நாணய நிதியத்திடம் கடன் பெறும் நிலையில் இந்தியா திகழ்ந்தது. எனினும் அவ்வாறான நிலைமை இலங்கைக்கு ஒருபோதும் ஏற்படவில்லை.

எனினும் ஜே.ஆர். ஜயவர்த்தனவின் திறந்த சந்தை பொருளாதார கொள்கையை கடைபிடித்து வியட்நாம் , இந்தியா மற்றும் சீனா போன்ற பாரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. 1983 ஆம் ஆண்டு இனகலவரத்திற்கு பின்னர் ஏற்பட்ட யுத்தத்தின் காரணமாக பொருளாதார வளர்ச்சியில் எமது வேகம் பெருமளவில் குறைவடைந்துள்ளது. எனினும் மேற் குறிப்பிட்ட நாடுகள் பெரும் வேகத்துடன் பயணித்தமையினால் பாரிய முன்னேற்றம் கண்டது.

தற்போது யுத்தம் நிறைவடைந்து விட்டது. சிறப்பான பாதையை நோக்கி பயணித்த இலங்கையின் பொருளாதாரம் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தின் பின்னர் பாரிய வீழ்ச்சியை சந்தித்தது. எனவே திறந்த பொருளாதார கொள்கையை கொண்டு எம்மை முந்தி சென்ற வியட்நாம் ,சீனா மற்றும் இந்தியா போன்ற நாட்டின் தரத்திற்கு தேசிய அரசாங்கத்தின் ஊடாக இலங்கையை கொண்டு வருவோம்.

இதன்மூலம் முன்னாள் ஜே.ஆர் ஜெயவர்தனவின் கனவை நனவாக்குவோம். அத்துடன் வடக்கு கிழக்கை பாரிய அபிவிருத்திக்கு உட்படுத்துவதுடன் 2050 ஆம் ஆண்டாகும் போது உலகில் மொத்த தேசிய உற்பத்தியில் 50 சதவீதத்தை ஆசியாவே எட்டிபிடிக்கும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ranil

Related posts: