யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று மின்தடை 

Wednesday, July 12th, 2017

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இன்று புதன்கிழமை(12) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாவற்குழி, மறவன்புலோ, தச்சன் தோப்பு, தனங்கிளப்பு, கோகிலாக்கண்டி, கேரதீவு வீதி, அறுகுவெளி ஆகிய பிரதேசங்களில் இந்த மின்தடை அமுலிலிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts:


இடைக்கால அனர்த்த முகாமைத்துவ திட்டம் பரீட்சை ஆணையாளருக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணி...
வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள மற்றும் புதுப்பிக்க ஒன்லைன் மூலம் ...
கலாசாலையில் சிறப்புற இடம் பெற்ற ஆசிரியர் தினம் - கலாசாலை தாயே என்ற இசைப் பேழையும் வெளியீடு!