சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட இலங்கையர்கள் கைது!
Tuesday, July 23rd, 2019கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட 20 இலங்கையர்கள் அந்நாட்டு அதிகாரிகளால் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை அவுஸ்திரேலிய எல்லையில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப உள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்படும் எவரும் அங்கு தங்க வைக்கப்பட மாட்டார்கள் என்றும், அவர்கள் விரைவில் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
வடக்கின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா !
நாட்டின் எந்தப் பகுதியையும் முடக்கும் தேவை கிடையாதென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க...
உயர்தரப் பரீட்சையின்போது மின் துண்டிப்பை ஏற்படுத்த வேண்டாம் – கல்வி அமைச்சர் வலியுறுத்து!
|
|
அரசியல்வாதிகளது தவறுகளால் வடக்கிற்கு ஒதுக்கப்படும் பணம் மீளவும் திரும்புகின்றது -வடமாகாண ஆளுநர்!
கம்பஹாவில் தொடர்ந்தும் முடக்கநிலை: அரச மற்றும் தனியார் வங்கிகி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை திறக்க அ...
இலங்கையில் அதிகரிக்கிறது மற்றுமொரு உயிர்கொல்லித் தொற்று - 10 மாவட்டங்கள் அபாயமிக்க பகுதிகளாக அடையாள...