சட்டமா அதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுக்களுக்கு இடையில் சந்திப்பு!

Tuesday, January 9th, 2018

உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அது குறித்து ஏற்பட்டுள்ள சட்ட சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகதேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் சிலர் சட்டமா அதிபரை சந்திக்கவுள்ளனர்.

இதன்போது மத வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரச்சாரங்கள் இடம்பெறுவது உள்ளிட்ட சட்டவிரோத பிரச்சாரங்கள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்துடன்கலந்துரையாடவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related posts: