சடலங்களை அடக்கம் செய்வது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை – சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Wednesday, December 30th, 2020

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு எந்த தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வது என்ற முடிவில் எந்த சூழ்நிலையிலும் இதுவரை மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த நடைமுறையில் மாற்றங்கள் இருந்தால் அது குறித்து பொதுமக்களிற்கு தெரியப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: