க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவு!

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவடைகின்றன.
பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் பரீட்சை மத்திய நிலையங்கள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் எவரேனும் அமைதியற்ற வகையில் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதனை கண்காணிப்பதற்காக நடமாடும் காவற்துறையினர் சேவையில் ஈடுபடவுள்ளதாக அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்தமுறை 4661 மத்திய நிலையங்களில் இடம்பெற்ற பரீட்சைகளுக்காக 6 லட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சார்த்திகள் தோற்றினர்.
Related posts:
இலங்கை குண்டுத் தாக்கதலின் எதிரொலி: தமிழகத்தில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
யாழ்.பல்கலைகழகத்திற்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரி நியமனம்!
கோம்பயன் மயானத்தில் மூடப்படாத மனிதக்குளி - மனித உடல்களை நாய்கள் இழுத்துச் செல்லும் அவலம் - யாழ்.மாநக...
|
|