க.பொ.த சாதாரண தரம் – பரீட்சாத்திகள் 5 பேரின் பெறுபேறுகள் இடை நிறுத்தம்!
Friday, December 14th, 2018கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சாத்திகள் ஐவரின் பெறுபேறுகளை இரத்து செய்ய பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த பரீட்சாத்திகள் பரீட்சையின் போது பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான நிலையிலேயே குறித்த திணைக்களம் இத்தீர்மானத்தினை எட்டியதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்திருந்தார்.
கடந்த சாதாரண தரப் பரீட்சையின் போது, மோசடி செய்தமை தொடர்பில் சில பரீட்சாத்திகள் மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட 07 பேர் கைதாகியமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
பஸ், ரயில் மற்றும் வேறு நடவடிக்கைகளுக்கு முற்பண கொடுப்பனவு அட்டை அறிமுகம்!
வலயக் கல்விப் பணிமனைகளை அதிகரிக்க தீர்மானம் - கல்வி அமைச்சர்!
ஜப்பானுக்குள் உள்நுழைய அனைத்து வெளி நாட்டவர்களுக்கும் தடை - ஜப்பானிய பிரதமர் அறிவிப்பு!
|
|