கோழி முட்டையின் விலை சடுதியாக உயர்வு – பேக்கரி உரிமையாளர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!
Saturday, September 5th, 2020கோழி முட்டையின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பேக்கரி உற்பத்திக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் குறித்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போது உள்நாட்டு சந்தையில் கோழி முட்டையின் விலையில் பாரியளவில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக 23 – 28 ரூபா வரையான விலையில் கோழி முட்டை ஒன்று விற்பனை செய்யப்படுகிறது. உள்நாட்டு சந்தையில் முட்டையின் விலையை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் அதனை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் கோழி முட்டையின் விலை இவ்வாறு அதிகரித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்படத்தக்கது.
Related posts:
வாக்குச் சாவடிகளில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்!
யாழ்ப்பாணத்தில் பணியாற்றியமை எனக்கு கிடைத்த வரப்பிரசாதம் - இந்திய துணைத்தூதர் நடராஜன் பெருமிதம்!
இலங்கையின் அறுகம்குடா மிகச் சிறந்த சுற்றுலா ஸ்தலங்களில் பிரகாசிப்பு!
|
|