அச்சுறுத்தலைக் கண்டித்து கிராம சேவகர்கள் பணிப்புறக்கணிப்பு!

Wednesday, August 1st, 2018

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியில் கிராம உத்தியோகத்தரை கத்திமுனையில் அச்சுறுத்தி அலுவலகத்தை சேதப்படுத்திய சம்பவத்தை கண்டித்து நல்லூர் பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்கள் தமது அலுவலகங்களுக்கு செல்லாது புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

தமக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை தாம் அலுவலகங்களுக்குச் செல்லாது பிரதேச செயலகத்தில் இருந்தே கடமையாற்றப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அச்சமான சூழலில் தமது பணிகளுக்கு இடையூறாக இந்த சம்பவங்கள் இடம்பெறுவதுடன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட கிராம சேவகருக்கு நட்டஈடு வழங்கப்படவேண்டும், தமது சொந்த உபகரணங்களை பயன்படுத்தி அலுவலகங்களில் இனிவரும் காலங்களில் செயற்பாடுகள் செய்ய முடியாது எனவும் தப்பு செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டுமென தெரிவித்துள்ளதுடன் தமது கோரிக்கையை பிரதேச செயலரிடம் முன்வைத்துள்ளனர்.

அதுவரை  தாம் அலுவலகங்களுக்கு செல்லாது பிரதேச செயலகத்திலேயே தமது கடமைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Related posts: