கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரி மருத்துவமனையில் 40 இந்தியர்கள் உட்பட 50 க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதி!

Thursday, November 12th, 2020

யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரியில் அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா மருத்துவமனையில் 50 ற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று காரணமாக நாட்டில் தேவை நிமித்தம் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் பலரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.  எனினும் அதிகளவான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதால் நாட்டில் வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

இந்நிலையில் கொழும்பில் தங்கி நின்று பணியாற்றிய பல வெளிநாட்டவர்களிற்கும் தற்போது கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த நிலையில் நேற்றையதினம்  யாழ்ப்பாணம் கோப்பாயில் உள்ள கல்வியல் கல்லூரியில் இயங்கும் கொரோனா வைத்தியசாலையில் 50ற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட 50ற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களில் கொழும்பு மாநகர சபையின் ஒரு ஒப்பந்தப் பணியில் ஈடுபட்ட 40 இந்திய தொழிலாளர்களும் கொரோனா நோய்த் தாக்கத்திற்கு இலக்கான நிலையில்  கோப்பாய் கல்வியல் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பை மீறி மக்கள் நலனை நிறைவேற்றியது ஈ.பி.டி.பி. - வவுனியா மக்கள் நன...
கிளிநொச்சியில் தொடர் மழை காரணமாக சுத்திகரிக்கப்பட்ட குடி நீரை வழங்குவதில் தொடர்ந்தும் சிரமம் – சிக்க...
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் சலுகை - பல்கலை விரிவுரையாளர்களுக்கு ஜனாதிபதி உறுதியளிப்பு!