கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் – பொதுமக்களிடம் கொரோனா செயலணி வேண்டுகோள்!

Thursday, May 6th, 2021

யாழ் மாவட்டத்தில் கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மேற்கொள்ளப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுக்கு மக்கள் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ் மாவட்ட கொரோனா கட்டுப்படுத்தும் செயலணி கோரியுள்ளது.

மேலும் சட்டவிரோதமாக வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகை தருபவர்களினால் கொவிட்-19 வைரஸ் பரவும் எச்சரிக்கை நிலவுகின்றது.

இதனை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக வருபவர்களை தடுத்து நிறுத்துவதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு இருப்பதாகவும் குறித்த செயலணி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: