கொழும்பு துறைமுக நகர விவகாரம்: மே 18 அல்லது 19 திகதிகளில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நம்பிக்கை!

Monday, May 10th, 2021

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை மே 18 அல்லது 19 திகதிகளில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்படும் என நம்புவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

சர்வதேச வர்த்தக சபை ஏற்பாடு செய்த நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், உயர் நீதிமன்றம் பரிந்துரைக்கும் திருத்தங்களை ஏற்றுக்கொண்டு அரசாங்கம் மாற்றங்களை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.

போர்ட் சிட்டி குறித்த ஆரம்ப பணிகள் 2013 இல் தொடங்கியபோது, முன்னாள் பிரதமரும் கடந்த அரசாங்கமும் இந்த திட்டத்தை தொடர்ந்தன என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இந்தத் திட்டம் இலங்கையின் பொருளாதாரத்தின் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்பதால் எதிர்க்கட்சியும் ஆதரவளிக்கும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த திட்டம் 80 மில்லியன் டொலர் மேலதிகமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டுவரும் என்றும் ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்து

Related posts:

நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்த பின்னரே சிறந்த நிலைக்கு திரும்பும் – பிரதமர் ரணில் விக...
பலஸ்தீன மக்களை பலிகடா ஆக்குவதை ஏற்றுக்கொள்ளமுடியாது - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!
தாதியர் பயிற்சிக்கான மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு - சுகாதார அமைச்சு உத்தியோகபூர்...