கொழும்பு துறைமுகத்தில் அடையாளம் காணப்பட்ட சில பிரிவுகளின் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஓய்வு பெற்ற ஊழியர்களை அழைக்க தீர்மானம்!
Friday, November 13th, 2020கொழும்பு துறைமுகத்தில் அடையாளம் காணப்பட்ட சில பிரிவுகளின் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஓய்வு பெற்ற ஊழியர்களை அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஏனைய சில நிறுவனங்களின் ஊழியர்களையும் கடமைகளுக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தள்ள அவர் நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு பல்வேறு நாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகை தந்துள்ள 14 கப்பல்களை கொழும்பு துறைமுக வளாகத்திற்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளும் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
4 பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்ட எதிர்பார்ப்பு : சுற்றுலாத்துறை தொடர்பில் அமைச்சு!
சுதந்திரதினத்தை முன்னிட்டு 545 கைதிகளுக்கு பொது மன்னிப்பு!
உலகின் முதல் விமானி இராவணன்தான்!
|
|
இலங்கை திரைப்படத்துறைக்கு பொழுதுபோக்கு வரியிலிருந்து ஈராண்டுகள் விலக்களிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜப...
நடத்துனர்களின்றி தனியார் பேருந்துகளை இயக்க திட்டம் - ஜனவரி மாதம்முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவ...
விஜேதாஸ ராஜபக்ஷ - ஜுலி சங்கிற்கும் இடையில் சந்திப்பு - நாட்டின் தற்போதைய பொருளதார மற்றும் அரசியல் நி...