கொழும்புத்துறை பகுதியில் கடலுக்குச் சென்றிருந்த மீனவர் சடலமாக மீட்பு!

Tuesday, May 17th, 2022

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்றிருந்த மீனவரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொழும்புத்துறை – உதயபுரம் பகுதியை சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்றையதினம் அவரது மகனுடன் கடல் தொழிலுக்கு சென்றிருந்த வேளையில், கடலில் தவறி விழுந்து காணாமல் போயிருந்தார்.

அப்பகுதி மீனவர்கள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில் இன்றையதினம் நெடுந்தீவு கடற்பரப்பில் அவரது சடலம் கரையொதுங்கியுள்ளது.

இந்நிலையில், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: