கொழும்பில்  குப்பைகளை மூன்றுநாட்களுக்குள் அகற்றிவிடுமாறு அமைச்சர் பாட்டலி சம்பிக்கரணவக்க உத்தரவு!

Wednesday, July 5th, 2017

 

கொழும்பின் வீதிகளில்காணப்படும் குப்பைகளைவரும் மூன்றுநாட்களுக்குள் அகற்றிவிடுமாறு துறைசார்ந்த அதிகாரிகளுக்குமேல் மாகாணமற்றும் பெருநகரஅமைச்சர் பாட்டலி சம்பிக்கரணவக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேல் மாகாணத்தின் முக்கிய இடங்களில் காணப்படும் குப்பைகளால் மக்களுக்குஏற்படும் அசௌகரியங்களைக் கருத்தில் கொண்டு உடனடியாக அக்குப்பைகளை அப்புறத்தப்படுமாறு பலதரப்பட்டோராலும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவ்வேலைத் திட்டத்தைமுன்னெடுக்கும் வகையில் அதற்கானபொறுப்பை ஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேனவும்,பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அமைச்சர் பாட்டலிசம்பிக்கரணவக்கவிடம் ஒப்படைத்திருந்தனர்.

இதனிடையே இதுவிடயம் தொடர்பானவிசேட கூட்டமொன்றை இன்றையதினம் ஏற்பாடுசெய்திருந்த அமைச்சர் வரும் மூன்றுநாட்களுக்குள் குறித்தகுப்பைகளை அகற்றுமாறு அவ்வாறு அகற்றாதுவிடின் அதிகாரிகள் மீது உரியநடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளார்.

Related posts: