3 ஆம் தவணைப் பரீட்சை நவம்பர் 14 ஆம் திகதி ஆரம்பம்!
Friday, October 12th, 2018வடக்கு மாகாணப் பாடசாலைகளின் 3 ஆம் தவணைப் பரீட்சை அடுத்த மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது என்று மாகாணக் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தரம் 6 தொடக்கம் 10 ஆம் வகுப்பு வரையான மாணவர்களின் பரீட்சையே 14 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
காலை 8 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பமாகும். 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விருப்பத் தெரிவுக்குரிய பாடங்களுடன் பரீட்சைகள் நிறைவடையும். தரம் 9 க்கான விஞ்ஞான செயன்முறை பரீட்சைகள் 8 ஆம் திகதியும் தரம் 10 க்கான விஞ்ஞான செயன்முறைப் பரீட்சைகள் 12 ஆம் திகதியும் நடைபெறும். தரம் 9 க்கான அழகியல் பாட செயன்முறைப் பரீட்சைகள் 12 ஆம் திகதியும் தரம் 10 க்கான அழகியல் செயன்முறைப் பரீட்சைகள் 8 ஆம் திகதியும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
அரசியலமைப்பை திருத்த வேண்டும் - அமைச்சர் தயாசிறி ஜெயசேகர!
பாகிஸ்தானில் இலங்கையர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 100 பேர் கைது - பாகிஸ்தான் வெட்கப்பட வேண்...
பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவது கடினம் - அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!
|
|