கொரோனா வைரஸ் : இலங்கைக்கு இலவசமாக மருந்துகளை வழங்கிய ஜப்பான்!

Monday, March 30th, 2020

இன்புலுவன்சா எதிர்ப்பு மருந்தான “AVIGAN’’வை கொரோனா வைரஸ் தொற்றாளிகளுக்கு பரீட்சார்த்த ரீதியாக அடுத்த வாரம் முதல் வழங்கப்படவுள்ளது.

அரசாங்கத்தின் முக்கிய அதிகாரி ஒருவரை கோடிட்டு ஆங்கில செய்தித்தாள் ஒன்று இதனை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ஜப்பான் மற்றும் சீனாவினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ள “AVIGAN’ வில்லைகள் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் வைத்திய கலாநிதி பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

இது கொரோனா வைரஸூக்கான முழுமையான மருந்தாக இல்லாத போதும் பதிலாக பயன்படுத்தக்கூடியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வில்லை உலகளாவிய ரீதியில் எபோல வைரஸ் பரவலின்போது பயன்படுத்தப்பட்டதாக பிரசன்ன குணசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

“AVIGAN’ கொரோனா வைரஸூக்கு தகுந்த மருந்து என்பது நிரூபிக்கப்பட்டால் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் அதிகளவில் அதனை கொள்வனவு செய்யும் என்றும் கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார்

Related posts: