கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு – குணமானோரின் எண்ணிக்கையும் 1057 ஆக அதிகரிப்பு – சுகாதார அமைச்சு தகவல்!

Wednesday, June 10th, 2020

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான நோயாளிகளின் எண்ணிக்கை இதுவரையான காலப்பகுதிவரை 1859 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 791 ஆக பதிவாகியுள்ளது. மேலும் குறித்த தொற்றில் இருந்து குணமானோரின் எண்ணிக்கை 1057ஆகவும் உயர்ந்துள்ளது.

இதனிடையே இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 11 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: