கொரோனா தொற்று : இலங்கையில் 12ஆவது மரணம் பதிவானது!
Sunday, August 23rd, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி இலங்கையில் இதுவரை 12 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 47 வயது பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து நாடு திரும்பியிருந்த நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உயிரிழந்துள்ளார்.
மேலும், சம்பவத்தில் உயிரிழந்த பெண், புற்றுநோய் மற்றும் இருதய நோயாலும் பீடிக்கப்பட்டிருந்தாக கூறப்படுகின்றது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 947 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் சென்னையில் இருந்து நாட்டுக்கு வந்தவர்கள் எனவும், ஏனையவர்களில் ஒருவர் ஐக்கிய அரபு இராச்சியத்தில இருந்தும் மற்றையவர் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், மேலும் 138 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


