கொரோனா தொற்று அதிகரிப்பது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Wednesday, April 22nd, 2020

நாளாந்தம் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் மக்கள் அது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது திடீரென கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம்  அதிகரித்து செல்வதனால் மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது இனங்காணப்பட்டுள்ள அனைத்து தொற்றாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டவர்கள். அத்துடன் கடந்த சில நாட்களாக கண்டுபிடிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அல்லது அவர்களுக்கு அருகில் பழகியவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் நோயாளிகள் அருகில் இருந்தவர்களை தேடி செல்வதற்கு பாதுகாப்பு பிரிவு மற்றும் புலனாய்வு பிரிவு ஆகியன நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: