கொரோனா தொற்றால் இளம் ஊடகர் பிரகாஷ் மரணம்!

Friday, September 3rd, 2021

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரகாஷ் ஞானபிரகாசம், கொவிட் தொற்றினால் நேற்று உயிரிழந்தார்.

26 வயதான அவர், கொடிகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவர் சுயாதீன ஊடகவியலாளராக செயற்பட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொவிட்-19 தொற்றுறுதியானது.

இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

Related posts: