கொரோனா குறித்து தேவையற்ற அச்சங்களை மருந்து நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன. – அமைச்சர் டலஸ் அலகபெரும குற்றச்சாட்டு!
Sunday, September 19th, 2021கடந்த வருடம் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் குறித்த தேவையற்ற அச்சங்களை பாரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மக்கள் மத்தியில் உருவாக்கின என அமைச்சர் டலஸ் அலகபெரும மாத்தறையில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தங்கள் நலனை முன்னெடுப்பதற்காக மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்தன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வைரஸ் சாதாரண கண்களிற்கு தெரியாது ஆனால் அதனை ஒரு வெடிக்கும் பொருள் அல்லது மாயத்தோற்றம் போன்று சித்தரித்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
கிளிநொச்சியில் டெங்குநோய் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுப்பு!
பயணிகள் விமானம் விழுந்து விபத்து - ஈரானில் 66 பேர் உயிரிழப்பு!
14ஆம் திகதிவரை அவதானமாக இருங்கள் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
|
|