தொழில் முயற்சியாளர்களை உருவாக்க புதிய திட்டம்!

Thursday, July 12th, 2018

ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கிலான என்டபிறைஸ் ஸ்ரீ லங்கா திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வங்கிகளையும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களையும் பாதுகாக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு உள்ளதாக பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன இதன்போது தெரிவித்துள்ளார்.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் என்டர்பிறைஸ் திட்டத்திற்காக 6 ஆயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்யும் யோசனை முன்மொழியப்பட்டது.

இதன் மூலம் கடன் பெறுவோருக்கான வட்டியை அரசாங்கம் செலுத்தும் என்று பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: