கொரோனா எங்கிருந்து எவ்வாறு பரவியது என்பதைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை அரசியல்மயப்படுத்தக்கூடாது – இலங்கை வலியுறுத்து!
Thursday, September 9th, 2021
கொரோனா தொற்றின் தோற்றம் குறித்து ஒரு விரிவான, அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் பாரபட்சமற்ற ஆய்வை முன்னெடுப்பது மிகவும் முக்கியமானதாகும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் தோற்றம் குறித்து ஆய்வானது, விஞ்ஞானம் மற்றும் சான்றுகள் சார்ந்த முறைமைகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதுடன், அது அரசியல் மயமாக்கப்படலாகாது என்பதை இலங்கை மீண்டும் வலியுறுத்துகின்றது.
இது தொடர்பாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குச் சுமுகமான மற்றும் விரிவான தீர்வுகளைக் காண ஒருங்கிணைந்த முயற்சியில் அனைத்து சர்வதேச பங்காளிகளுடனும் இலங்கை தொடர்ந்தும் பணியாற்றும் என்று வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை விமானப்படையின் 70வது ஆண்டு நிறைவு விழா ஆரம்பம் – இந்தியாவின் 23 வான்கலன்களும் பங்கேற்பு!
கொவிட் தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றம் குறித்து கிராம உத்தியோகத்தர்கள் அறிக்கை வழங்க வேண்டும் - வ...
கடந்த வருடத்தில் 300 க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் சிறைச்சாலையில் - சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்க...
|
|
|


