கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாடசாலைகளை விரைவாக ஆரம்பிக்கும் நிலை இல்லை – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!
Thursday, June 24th, 2021தற்போதைய கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில்,மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பாடசாலைகளை விரைவாக ஆரம்பிக்கும் திட்டம் எதுவும் இல்லை என கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் மருத்துவத்துறை விசேட நிபுணர்களின் ஆலோசனைப்படி பாடசாலைகளை மீளத்திறப்பதற்குரிய திகதி தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போதைய கொவிட் தொற்று அச்சுறுத்தல் இலங்கைக்கு மாத்திரம் விசேடமான ஒன்றல்ல. உலக நாடுகளில் பல இதற்கு தீர்வை காண்பதில் ஈடுபட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கில் மீன் ஏற்றுமதி கைத்தொழிற்சாலை வலயம்!
இராணுவத் தளபதியின் அதிரடி உத்தரவு!
40 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து தீப்பிடித்தது எரிந்து நாசம் - உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என தெரிவ...
|
|