கொரோனாவிற்கு மத்தியில் மலேரியாவை முற்றுமுழுதாக இல்லாதொழிக்கும் மருந்து கண்டுபிடிப்பு!

Tuesday, May 5th, 2020

மலேரியாவை முழுமையாக தடுக்கும் மருந்தொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் குழுவொன்றினால் இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மருந்தினால் மலேரியாவை இவ்வுலகத்திலிருந்து முற்றாக ஒழிக்கமுடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகளவில் மலேரியாவினால் நான்கு இலட்சத்துக்கு அதிகமானோர் உயிரிழக்கின்றனர் என்பதோடு, ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளே அதிகமாக உயிரிழக்கின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts: